Sunday, December 9, 2007

முதற் காதல்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

வாடைக் காற்று
பசும்புல் நுனிகளில்
பனிமுட்டை இடும் அதிகாலைகளில்
என் இதயம் நிறைந்து கனக்கும்.

அன்னையின் முலைக்காம்பையும்
பால்ய சகியின் மென் விரல்களையும்
பற்றிக் கொண்ட கணங்களிலேயே
மனித நேயம்
என்மீதிறங்கியது.

நான் இரண்டு தேவதைகளால்
ஆசீர்வதிக்கப் பட்டவன்.

"பால்ய சகியைப் பற்றி
உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே"
என்று கேட்பான் எனது நண்பன்.

குரங்கு பற்றிய பூமாலைகளாய்
நட்பை
காதலை
புணர்ச்சியை
குதறிக் குழப்பும்
தமிழ் ஆண் பயலிடம்
எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும்
சந்தேகம் கொள்ளுதல்
சாலும் தெரியுமா?

அடுத்த வீட்டு வானொலியை
அணைக்கச் சொல்லுங்கள்
பஸ் வரும் வீதியில்
தடைகளைப் போடுங்கள்
இந்த நாளை
எனக்குத் தாருங்கள்.

என் பாதித் தலையணையில்
படுத்துறங்கும் பூங்காற்றாய்
என் முதற் காதலி
உடனிருக்கின்ற காலைப் பொழுதில்
தயவு செய்து
என்னைக் கைவிட்டு விடுங்கள்.

தேனீரோடு கதவைத் தட்டாதே
நண்பனே.

எனது கேசத்தின் கருமையைத் திருடும்
காலனை எனது
இதயத்துக்குள் நுழையவிடாது துரத்துமென்
இனிய சகியைப் பாடவிடுங்கள்
அவளை வாழ்த்தியோர் பாடல் நான்
இசைப்பேன்.

காடுகள் வேலி போட்ட
நெல் வயல்களிலே
புள்ளி மான்களைத் துரத்தும் சிறுவர்கள்
மயில் இறகுகளைச் சேகரிக்கும்
ஈழத்து வன்னிக் கிராம மொன்றில்
மனித நேயத்தின் ஊற்றிடமான
பொன் முலைக் காம்பை
கணவனும் குழந்தையும்
கவ்விட வாழும்
என் பால்ய சகியை வாழ்த்துக!

என் முதற் காதலின் தேவதைக் குஞ்சே!
இனிமை
உன் வாழ்வில் நிறைக.
அச்சமும் மரணமும்
உனை அணுகற்க.

ரைபிள்களோடு காவல் தெய்வமாய்
உனது
ஊரகக் காடுக்குள் நடக்குமென் தோழர்கள்
மீண்டும் மீண்டும்
வெற்றிகள் பெறுக.

ஒருநாள் அவருடன் நானும் சேர்ந்து
உனது கிராமத்து
வீதியில் வரலாம்
தண்ணீர் அருந்த உன் வீட்டின் கடப்பை
அவர்கள் திறந்தால்
எத்தனை அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டும்.

நடை வரப்பில்
நாளையோர் பொழுதில்
என்னை நீ காணலாம் .....
யார் மீதும் குற்றமில்லை.
என்ன நீ பேசுதல் கூடும்?
நலமா திருமண மாயிற்றா?
என்ன நான் சொல்வேன்?

புலப்படாத ஒரு துளி கண்ணீர்
கண்ணீர் மறைக்க
ஒரு சிறு புன்னகை
ஆலாய்த் தழைத்து
அறுகாக வேர் பரப்பி
மூங்கிலாய்த் தோப்பாகி
வாழ வேண்டும் எந்தன் கண்ணே.

1985

Sunday, November 4, 2007

அஞ்சலிப் பரணி

அஞ்சலிப் பரணி
- வ.ஐ.ச.ஜெயபாலன்

எவர்க்கும் பணியா வன்னி
பிள்ளைகளைப் பறிகொடுத்து
விம்மி அழுகிறது.
எதிரிகள் அறிக
எங்கள் யானைக் காடு சிந்துவது
கண்ணீர் அல்ல மதநீர்.

விழு ஞாயிறாய்
பண்டார வன்னியனும் தோழர்களும்
கற்சிலை மடுவில் சிந்திய குருதி
செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில்
எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை
புதைத்து வருகின்றோம்.
புலருகிற ஈழத்தின்
போர்ப்பரணி பாடுதற்க்கு.

எங்கள் மூன்று அம்மன்களும்
பதினெட்டுக் காதவராயன்களும்
முனியப்பர்களும் எங்கே ?
அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய்
வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என
வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது.

போராளிகளுக்காக
தேன் வாசனையை
வாகை மலர் அரும்புகளில்
பொதிந்து காத்திருக்கும்
வன்னிகாடே வன்னிக் காடே
உன்மனதைத் தேற்றிக்கொள்.
உன் புன்னகை மன்னன்
பாண்டவருடன் களபலியானான்.

அவன்தான் தாயே
பலதடவை
காலனை வென்று ஞாலப் பந்தில்
புலிச்சினை பொறித்த உன் தவப் புதல்வன்.
நாம் கலங்குவதை அவன் விரும்பான்

தன் உயிரிலும் தாங்கிய கொடியை
ஐநாவில் ஏற்றுக எனப் பணித்தே அவன் போனான்

visjayapalan@gmail.com

Sunday, October 7, 2007

முன்றில் வேம்பு

முன்றில்வேம்பு

வ.ஐ.ச.ஜெயபாலன்

நினைவுள்புதைந்த வேப்பம் வித்து
திறக்கும்இணைய ஓவியத் தளமாய்
நெஞ்சுள்பசும் குடை விரிக்க
காலத்தைமீட்டு வாழ்ந்தேன்.

முலை அமுது உண்டேன்.
நிழலில்தவள்ந்து
மண் விழையாடினேன்.
என் அயல் சிறுமி
`குஞ்சாமணியை`
எங்கேதொலைத்தாள்
என்று வியந்தேன்.
பாட்டிகதைகளில் முடிகள் புனைந்தேன்.

கோவிற்பொங்கலில்
நீறு பூத்த தணற் பாவைகளாய்
வெளியேநின்ற சிறுவரை எனது
பால்யநண்பர்கள் சீண்ட வெகுண்டு
அதிர்ந்தமனசை
'அது அது அவர் அவர்
ஊழ்வினைப்பயன் ' என
தேற்றியபாட்டியை நம்ப மறுத்தேன்.


எங்கள்வீட்டில் சமைக்கிற பெண்ணுடன்
அம்மணமாக மாமா இருந்ததை
கண்டதன்பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன்.
ஆண்குறிவிறைக்க நோயென அஞ்சி
விம்மிஅழுதேன்.

என் அயலாள் மிரள
முதன் முதலாக
விசத்தேன் குளவிக் கூடாய்த் திரண்ட
இள முலை உண்டேன்.
மனதுள் கிழைகள் நெரியும்
வேம்பின் வேருள் என் காலப் புதையல்.

நினைப்புத்தானேஇளமையும் முதுமையும்.

சூரியப்பந்தை ஏந்த உயரும்
முன்றில்வேம்பினைச் சுற்றி
வயது உடைய
வட்டப்பாதையில் முன் செல்கிறது
என் காவிய வாழ்வு.

நான் வேண்டுவது
காதலும்கவிதையுமாக
சோடிகூடியும்
கண்ணீரும்புலம்பலுமாக
தனித்தும்
குயில்கள்பாடிப் பாடி வளர்த்த
எனது வேப்ப மரத்தின் நீழலே.

நான் ஆசைப்படுவது
விடுதலைஅடைந்த தோழியரோடு
குறுகியஇரவுகளிலும்
விடுதலைக்கெழுந்த தோழர்களோடு
நீண்டஇரவுகளிலும்
துணையாய்இருந்த என் வேம்பின் கீழே
பொறுமையாய்நிலா பூக்கள் தைத்த
கரும் கம்பளமே.

நான் வேண்டுவது
புத்தன்தேவனான போதி மரமல்ல
அன்னையின்முலை அமுதம் உண்டும்
தோழியர்அமுத முலையினை உண்டும்
நான் மனிதனான
வேப்ப மரமே.

முன்றில் வேம்பு

முன்றில்வேம்பு

வ.ஐ.ச.ஜெயபாலன்

நினைவுள்புதைந்த வேப்பம் வித்து
திறக்கும்இணைய ஓவியத் தளமாய்
நெஞ்சுள்பசும் குடை விரிக்க
காலத்தைமீட்டு வாழ்ந்தேன்.

முலை அமுது உண்டேன்.
நிழலில்தவள்ந்து
மண் விழையாடினேன்.
என் அயல் சிறுமி
`குஞ்சாமணியை`
எங்கேதொலைத்தாள்
என்று வியந்தேன்.
பாட்டிகதைகளில் முடிகள் புனைந்தேன்.

கோவிற்பொங்கலில்
நீறு பூத்த தணற் பாவைகளாய்
வெளியேநின்ற சிறுவரை எனது
பால்யநண்பர்கள் சீண்ட வெகுண்டு
அதிர்ந்தமனசை
'அது அது அவர் அவர்
ஊழ்வினைப்பயன் ' என
தேற்றியபாட்டியை நம்ப மறுத்தேன்.


எங்கள்வீட்டில் சமைக்கிற பெண்ணுடன்
அம்மணமாக மாமா இருந்ததை
கண்டதன்பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன்.
ஆண்குறிவிறைக்க நோயென அஞ்சி
விம்மிஅழுதேன்.

என் அயலாள் மிரள
முதன் முதலாக
விசத்தேன் குளவிக் கூடாய்த் திரண்ட
இள முலை உண்டேன்.
மனதுள் கிழைகள் நெரியும்
வேம்பின் வேருள் என் காலப் புதையல்.

நினைப்புத்தானேஇளமையும் முதுமையும்.

சூரியப்பந்தை ஏந்த உயரும்
முன்றில்வேம்பினைச் சுற்றி
வயது உடைய
வட்டப்பாதையில் முன் செல்கிறது
என் காவிய வாழ்வு.

நான் வேண்டுவது
காதலும்கவிதையுமாக
சோடிகூடியும்
கண்ணீரும்புலம்பலுமாக
தனித்தும்
குயில்கள்பாடிப் பாடி வளர்த்த
எனது வேப்ப மரத்தின் நீழலே.

நான் ஆசைப்படுவது
விடுதலைஅடைந்த தோழியரோடு
குறுகியஇரவுகளிலும்
விடுதலைக்கெழுந்த தோழர்களோடு
நீண்டஇரவுகளிலும்
துணையாய்இருந்த என் வேம்பின் கீழே
பொறுமையாய்நிலா பூக்கள் தைத்த
கரும் கம்பளமே.

நான் வேண்டுவது
புத்தன்தேவனான போதி மரமல்ல
அன்னையின்முலை அமுதம் உண்டும்
தோழியர்அமுத முலையினை உண்டும்
நான் மனிதனான
வேப்ப மரமே.

Thursday, September 27, 2007

உயிர்த்தெழுந்த நாட்கள்

அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம்
துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல.
மீண்டும் காற்றில் மண் வாங்கி
மாரி மழைநீர் உண்டு
பறவைகள் சேர்ந்த செடிகொடி வித்துகள்
பூவேலைப்பாட்டுடன் நெய்த
பச்சைக் கம்பளப் பசுமைகள் போர்த்து
துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல
அமைதியாய்த் தோற்றியது கொழும்பு மாநகரம்.
சித்தன் போக்காய் தென்பாரதத்தில்
திரிதலை விடுத்து மீண்ட என்னை
"ஆய்போவன்" என வணங்கி
ஆங்கிலத்தில் தம் உள்ளக்கிளர்ச்சியை
மொழி பெயர்த்தனர் சிங்கள நண்பர்கள்.
கொதிக்கும் தேநீர் ஆறும் வரைக்கும்
உணவகங்களிலும்
பஸ்தரிப்புகளில் காத்திரு பொழுதிலும்
வழி தெருக்களிலே
கையை அசைக்கும் சிறு சுணக்கடியிலும்
திருமலைதனிலே படுகொலை யுண்ணும்
தமிழருக்காகப் பரிந்துபேசுதலும்
பிரிவினைக் கெதிராய்த் தீர்மானம் மொழிதலும்
இன ஒற்றுமைக்கு
பிரேரணைகளும் ஆமோதிப்பும்
இவையே நயத்தகு நாகரிகமாய்
ஒழுகினர் எனது சிங்கள நண்பர்கள்.

வழக்கம்போல வழக்கம்போல
அமைதியாய் திகழ்ந்தது கொழும்புமாநகரம்.
கொழும்பை நீங்கி
இருபது கி.மீ. அப்பால் அகன்று
கற்கண்டை மொய்த்த எறும்புகள் போன்று
ஆற்றோரத்து மசூதிகள் தம்மை
வீடுகள் மொய்த்த
மல்வானை என்ற சிறுகிராமத்தில்
களனி கங்கைக் கரையில் அமர்ந்து
பிரவாகத்தில் என் வாழ்வின்பொழுதை
கற்கள் கற்கள் கற்களாய் வீசி
ஆற்றோரத்து மூங்கிற் புதரில்
மனக் குரங்குகளை இளைப்பாறவிட்டு
அந்த நாட்களின் அமைதியில் திளைத்தேன்.
தனித் தனியாகத் துயில் நீங்கியவர்
கிராமமாய் எழுந்து
'இந்நாளைத் தொடர்வோம் வருக' என
பகலவனதன்னை எதிர் கொண்டிடுதல்
ஏனோ இன்னும் சுணக்கம் கண்டது.
கருங்கல் மலைகளின் 'டைனமற்' வெடிகள்
பாதாள லோகமும் வேரறுந்தாட
இன்னமும் ஏற்றப் பட்டிடவில்லை
இன்னமும் அந்தக் கடமுடா கடமுடா
'கல்நொருக்கி' யந்திரஓட்டம் தொடங்கிடவில்லை;
பஸ்தரிப்புகளில்
'றம்புட்டான்' பழம் அழகுறக்குவித்த
தென்னோலைக் கூடைகள் குந்திடவில்லை,
நதியினில் மட்டும்
இரவு பகலை இழந்தவர் போலவும்,
இல்லாமையின் கைப் பாவைகள் போலவும்
பழுப்புமணல் குழித்துப் படகில் சேர்க்கும்
யந்திர கதியுடைச் சிலபேர் இருந்தனர்.
எனினும் சூழலில் மனுப்பாதிப்பு
இவர்களால் இல்லை.
தூர மிதக்கும் ஏதோ ஒருதிண்மம்
நினைவைச் சொறியும்.
இரு கரைகளிலும் மக்களைக் கூட்டி
எழுபத்தொன்று ஏப்பிரல் மாதம்
நதியில் ஊர்வலம் சென்றன பிணங்கள்;
இளமைமாறாத சிங்களப் பிணங்கள்.
எழுபத்தேழின் கறுத்த ஆகஸ்டில்
குடும்பம் குடும்பமாய் மிதந்து
புலம் பெயர்ந்தவைகள் செந்தமிழ்ப் பிணங்கள்;
(அதன் பின்னர்கூட இது நிகழ்ந்துள்ளதாம்)
இப்படி இப்படி எத்தனை புதினம்
நேற்று என் முஸ்லீம் நண்பர்கள் கூறினர்.
வாய்மொழி இழந்த பிணங்களில் கூட
தமிழன் சிங்களன் தடயங்கள் உண்டோ!
கும்பி மணலுடன் கரையை நோக்கிப்
படகு ஒன்று தள்ளப்பட்டது.
எதிர்ப்புறமாக மரமேடையிலும் ஆற்றங்கரையிலும்
குளிப்பும் துவைப்புமாய்
முஸ்லீம் பெண்களின் தீந்தமிழ் ஒலித்தது.
பின்புற வீதியில்
வெண்தொப்பி படுதா மாணவமணிகளின்
இனிய மழலைத் தமிழ்கள் கடந்தன.
காலைத் தொழுகை முடிந்தும் முடியாததும்
மசூதியிலிருந்து இறங்கிய மனிதர்கள்
என்னை அழைத்தனர்.
"கலவரம்" என்று கலவரப்பட்டனர்.
இலங்கையில் கலவரம் என்பதன் அர்த்தம்
நிராயுதபாணித் தமிழ்க் குடும்பங்களை
சிங்களக் காடையும் படையும் தாக்குதல்.
சிலசில வேளை முஸ்லீம்களுக்கும்
இது நிகழ்ந்திடலாம்.
தமிழரின் உடைமை எரியும் தீயில்
தமிழரைப் பிளந்து விறகாய் வீசும்
அணுயுகக் காட்டு மிராண்டிகள் செய்யும்
கொடுமைகள் தன்னை எடுத்துச் சொல்லினர்.
பருந்தின் கொடுநிழல் தோய்ந்திடும் கணத்தில்
தாயின் அண்மையைத்
தேடிடும் கோழிக் குஞ்சாய்த் தவித்தேன்.
தமிழ் வழங்குமென் தாய்த் திருப்பூமியின்
'தூர இருப்பே' சுட்டதென் நெஞ்சில்
தப்பிச் செல்லும் தந்திரம் அறியா
மனம் பதைபதைத்தது.
தென் இலங்கை என் மன அரங்கில்
போர் தொடுத்த ஓர் அந்நிய நாடாய்
ஒரு கணப்பொழுதில் சிதைந்து போனது.

ஒருமைப்பாடு என்பது என்ன
அடிமைப்படுதலா?

இந்தநாடு எங்கள் சார்பாய்
இரண்டுபட்டது என்பதை உணர்ந்தேன்.
நாம் வாழவே பிறந்தோம்.
மரண தேவதை இயற்கையாய் வந்து
வருக என்னும் வரைக்குமிவ் வுலகில்
இஷ்டப்படிக்கு
பெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று
தனித்தும் கூடியும் உலகவாழ்வில்
எங்களின் குரலைத் தொனித்து
மூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்.

எமது இருப்பை
உயர்ந்தபட்சம் உறுதி செய்யும்
சமூக புவியியல் தொகுதியே தேசம்.
எங்கள் இருப்பை உறுதிசெய்திடும்
அடிப்படை அவாவே தேசப்பற்று.
நாடுகள் என்று இணைதலும் பிரிதலும்
சுதந்திரமாக
மானிட இருப்பை உறுதிசெய் திடவே.

இதோ எம் இருப்பு வழமைபோலவே
இன அடிப் படையில்
இந்த வருடமும் நிச்சயமிழந்தது.
நான் நீ என்பது ஒன்றுமே இல்லை.
யார்தான் யாரின் முகங்களைப் பார்த்தார்?
நாவில் தமிழ் வழங்கியதாயின்
தீயில் வீசுவார்.
பிரிவினை கோரிப் போராடும் தமிழர்
ஒருமைப்பாட்டிற்கு உழைக்கும் தமிழர்
இராமன் ஆளினும் இராவணன் ஆளினும்
நமக்கென்ன என்று ஒதுங்கிய தமிழர்
தமிழ்ப் பேரறிஞர், தமிழ்ப்பேதையர்
ஆண் பெண் தமிழர்கள்
முகத்தை யார் பார்த்தார்?
களை பிடுங்குதல் போல
தெரிவு இங்கும் இலகுவாய்ப் போனது.
'சிங்கள பௌத்தர்' அல்லாதவர்கள்
என்பதே இங்கு தெரிவு.
கத்தோலிக்க சிங்களர் தம்மை
கழுத்தறுக்கும் கடைசி நிலைவரை
இணைத்துக் கொள்க;
தற்போதைக்கு முஸ்லீம் மக்களைத்
தவிர்க்க என்பதே அடிப்படைத் தந்திரம்.
மசூதியை விட்டுத் தொழுகையின் நடுவே
இறங்கி வந்த மனிதர்கள் என்னை
எடுத்துச் சென்றனர்;
ஒளித்து வைத்தனர்.
என்ன குற்றம் இழைத்தனன் ஐயா?
தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து
என்ன குற்றம் இழைத்தனன் ஐயா?
தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து
அவர்க்கும் எனக்கும் வேறுபாடேது?

நேற்றுப் பௌர்ணமி.
முட்டை உடைப்பதே பௌர்ணமி நாளில்
அதர்மமென் றுரைக்கும்
பௌத்த சிங்கள மனிதா சொல்க!
முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்
அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?

இரத்தம் தெறித்தும் சாம்பர் படிந்தும்
கோலம் கெட்ட காவி அங்கியுள்
ஒழுங்காய் மழித்த தலையுடன் நடக்கும்
இதுவோ தர்மம்?
ஏட்டை அவிழ்க்காதே
இதயத்தைத் திறந்து சொல்,
முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்
அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?

வன வாசத்தில்
இல்லாதது போன்ற இருப்பில்
கொதிப்புடன் சில நாட் கழிந்தது.
எங்கே எங்கே எமது தேசம்?
எமது இருப்பைத் தனித்தனியாகவும்
எமது இருப்பை அமைப்புகளாகவும்
உறுதிப்படுத்தும் புவிப் பரப்பேது?
இலங்கை அரச வானொலி சொன்னது
"அகதிகள் முகாம்களில் பாதுகாப்பாக
பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளனர்."
அகதிகள் முகாமே எங்கள் தேசமாய்
அமைதல் கூடுமோ?
இலங்கை அரசின் வானொலி சொன்னது
"அகதிகளான தமிழர்கள் தம்மை
பாதுகாப்புக்காய்
வடக்குக் கிழக்குப் பகுதிகள் நோக்கி
அனுப்பும் முயற்சிகள் ஆரம்ப மென்று."
கப்பல்கள் ரயில்கள் பஸ் வண்டிகளில்
வடக்குக் கிழக்காய்ப் புலம் பெயர்கின்றோம்.
எங்கே எங்கே எம்தாய் நாடு?
எங்கே எங்கே,
நானும்நிமிர்ந்து நிற்கவோர் பிடிமண்?
நாடுகளாக இணைதலும் பிரிதலும்
சுதந்திரமாக நம் சமூக இருப்பை
உயர்ந்தபட்சம் உறுதி செய் திடவே,
இங்கு இப்பொழுதில்,
நான் நீ என்பது ஒன்றுமேயில்லை
பிரிவினை வாதிகள்
ஒருமைப்பாட்டையே உரத்துப் பேசுவோர்
காட்டிக் கொடுப்பவர்
அரசின் ஆட்கள்
கம்யூனிஸ்டுகள் பூர்சுவாக்கள்
யார்தான் முகத்தைப் பார்த்தாரிங்கு,
எமது நிலவுகை இப்படியானதே,
எங்கெம் நாடுகள் எங்கெம் அரசு?
எங்கு எம்மைக் காத்திடப் படைகள்?
உண்டா இவைகள் உண்டெனில் எங்கே?
இல்லையாயின் ஏன் இவை இல்லை?

மசூதிகளாலே இறங்கி வந்து
என்னை எடுத்துச் சென்ற மனிதர்கள்
பொறுத்திரு என்றனர்.
விகாரைப் புறமாய் நடந்துவந்த
காட்டுமிராண்டிகள்
இன்னும் களைத்துப் போகவில்லையால்
அஞ்சி அஞ்சித்
தலைமறைந் திருத்தலே தற்போது சாத்தியம்.
இதுவே தமிழன் வாழ்வாய்ப் போகுமோ?

அப்படியாயின்
இதைவிட அதிகம் வாழ்வுண்டே சாவில்!
நிலவரம் இதுவெனில்
நாங்கள் எங்கள் தாய்நாட்டில் இல்லை;
அல்லதெம் தாய்நாடு எம்மிட மில்லை.
சாத்தியமான வாழ்வை விடவும்
அதிகம் வாழ்வு சாவினில் என்றால்
எங்கள் இளைஞர் எதனைத் தெரிவார்?

முஸ்லீம்போல தொப்பி யணிந்து
விடுதலை வீரனைக் கடத்தி வருதல்போல்
கொழும்புக் கென்னைக் கொண்டு வந்தனர்.
விடுதலை வீரனைப் போல்வதை விடவும்
விடுதலை வீரனாய் வாழ்வதே மேலாம்.

கொழும்பில் தொடர்ந்தஎன் வன வாசம்
கொடிது கொங்கிறீற் வனம் என்பதனால்,
அமெரிக்க நண்பன் ஒருவனின் வீட்டில்
என்னைப் பதுக்கி வைத்தனராயின்
சொல்க யார்தான் இந்த நாட்டில்?
அந்நியன்கூட இல்லை போலும்!
அந்நியனாகவும்,
ஏதுமோர் நாட்டின மாதல் வேண்டுமே!
அமெரிக்க நண்பரும் ஜப்பான் தோழியும்
இஷ்டம் போல அளந்தனர் கொழும்பை
காட்டு மிராண்டிக் கைவரிசைகளின்
பாதகக் கணங்களைப்
புகைப்படச் சுருளில் பதித்துக் கொண்டனர்.
அங்கு என் வாழ்வின் பெரியபகுதி
பூனைகளோடும், பறவைகளோடும்!

*

வானொலி எனக்கு ஆறுதலானது
பாரதத்தின் கண்களாக
தமிழகம் விழித்து
உலகை உசுப்பும் ஓசையைக் கேட்டேன்.
சுரங்கமொன்றுள் மூடுப்பட்டவர்
தலைக்குமேலே நிலம் திறபடும்
துளைப்பு ஓசை செவிமடுத்தது போல்
புத்துயிர் பெற்றேன்.
உலகம் உள்ளது, உலகம் உள்ளது.
உலகின் வலிய மனச் சாட்சியினை
வியட்னாம் போரின் பின்னர் உணர்ந்தேன்.
காட்டு மிராண்டிகள் திடுக்குற
எழுந்தது எங்கும் உலக நாரீகம்
இந்த நாட்டில் எனக்கிடமில்லை;
இந்த உலகில் எனதிடமுள்ளது.
ஆயின்,
எங்கென் நாடு? எங்கென் நாடு?

வானொலிப் பெட்டியை வழமைபோல் திறந்தேன்
வழமை போலவே
ஒப்பாரிவைத்தது தமிழ் அலைவரிசை.
இனவெறிப் பாடலும் குதூகலஇசையும்
சிங்கள அலையில் தறிகெட எழுந்தது.
இதுவே இந்த நாட்டின் யதார்த்தம்
சிறைச் சாலையிலே கைதிகளான
எங்கள் நம்பிக்கை ஞாயிற்றின் விதைகள்
படுகொலைப்பட்ட செய்தி வந்தது
கிளாரினட் இசையின் முத்தாய்ப்போடு.
யாரோ எவரோ அவரோ இவரோ
அவஸ்தையில் இலட்சம் தலைகள் சுழன்ற
அந்தநாட்கள் எதிரிக்கும் வேண்டாம்;
பாண்டியன் வாயிலில் கண்ணகியானது
சன்னதம் கொண்ட எனது ஆத்மா.
மறுநாட் காலை அரசு நடத்தும்
'தினச்செய்தி' என்னும்
காட்டு மிராண்டிகளின் குரலாம் தினசரி
'பயங்கர வாதிகள் கொலை' என எழுதி
எமது புண்ணில் ஈட்டி பாய்ச்சியது.
குற்றம் என்ன செய்தோம் சொல்க!
தமிழைப் பேசினோம்.
இரண்டாம் தடவையும் காட்டும்ராண்டிகள்
சிறையுட் புகுந்தனர் கொலைகள்விளுந்தன;
கிளாரினட் இசையுடன் செய்தியும் வந்தது.

உத்தமனார்,
காட்டுமிராண்டித் தனங்களைத் தொகுத்து
உத்தியோக தோரணையோடு
"சிங்கள மக்களின் எழுச்சி" என்றார்;
தென்னை மரத்தில் புல்லுப் புடுங்கவே
அரசும் படையும் ஏறிய தென்றார்.
உலகம் உண்மையை உணர்ந்து கொண்டது.

துப்பாக்கிச் சன்னமாய் எனது ஆத்மாவை
ஊடுருவியது,
விமலதாசனின் படுகொலைச் செய்தி.
ஒடுக்குதற் கெதிராய் போர்க்களம் தன்னில்
பஞ்சமர்க்காகவும்,
தமிழைப் பேசும் மக்களுக்காகவும்,
உழைப்பவர்களுக்காகவும்
"ஒருநல்ல கிறிஸ்தவனாய் இறப்பேன்" என்பாய்
இப்படி நிறைததுன் தீர்க்க தரிசனம்.
விடுதலைப் போரின் மூலைக்கல்லாய்
உன்னை நடுகையில்,
ஒருபிடி மண்ணை அள்ளிப் போடுமென்
கடமை தவறினேன் நண்ப,
ஆயிரமாய் நீ உயிர்த்தே எழுக!

"அடக்கினேன்
எழுபத்தொன்றில் கிளர்ச்சியை நானும்
பிரிவினைப் போரை வேரறுத்திடுதல்
ஏன் இவ்வரசுக்கு இயலவில்லை?"
சிறிமா அம்மையார் திருவாய் மலர்ந்தார்.
'நரபலியாகத் தமிழ் இளைஞரை
வீடுவீடேறிக் கொன்று குவிப்பீர்'
மறைபொருள் இதுவே-
மீண்டும் இளைஞரின் இரத்தம் குடிக்க
மனம் கொண்டாரோ,
காறி உமிழ்ந்தேன்.

வீட்டினுள் ஜன்னலால் புகுந்த றைபிள்
கலா பரமேஸ்வரனைக் காவு கொண்டதாம்;
'அப்பாவி' என்று
முகத்தில் எழுதி ஒட்டிவைத்திருக்குமே! -
முகத்தை யார் பார்த்தார்.....
இப்படியாக ஐம்பது தமிழர்கள் யாழ்ப்பாணத்தில்-
முத்தமிட்டனர், செம்மண் பூமியை

பஸ்தரிப்புகளில் தேநீர்ச் சாலையில்
வழி தெருக்களில்
ஒருமைப்பாட்டை உரத்துப் பேசிய,
சிங்கள நண்பரை எதிர்பார்த்திருந்தேன்.
முற்போக்கான கோஷங் களோடு
கொழும்பு நகர வீதியை நிறைத்த
சிவப்புச் சட்டைச் சிங்களத் தோழரின்
முகங்களைத் தேடிய படிக்கு,
வீதிப்பக்கமாய் மொட்டை மாடியில்
கால்கடுக்க நெடுநாள் நின்றேன்.
எங்கே மறைந்தன ஆயிரம் செங்கொடி?
எங்கே மறைந்தன ஆயிரம் குரல்கள்?
கொடிகள் மட்டுமே சிவப்பாய் இருததா?
குரலில்மட்டுமே தோழமை இருந்ததா?
நான் உயிர்பிழைத்தது தற்செயலானது! -
முகத்தை யார் பார்த்தார்?

பரிதாபமாக என்முன் நிற்கும்
சிங்களத்தோழர் சிறுகுழுவே கலங்கிடல் வேண்டாம்.
உங்கள் நட்பின் செம்மைச் செழிப்பில்
சந்தேகம் நான் கொண்டிடவில்லை.
தற்போ துமது வல்லமை தன்னில்
நம்பிக்கை கொள்ள ஞாயமும் இல்லை.

சென்று வருக,
எனது உயிர்தப்பும் மார்க்கத்தில்
நின்று கதைக்க ஏதுபொழுது? என்றாலும்,
பின்னொருகால் சந்திப்போம்
தத்துவங்கள் பேச...

தமிழர் உடைமையில்
கொள்ளை போனதும் எரிந்ததும் தவிர்த்து
எஞ்சிய நிலத்தில் எரிந்த சுவரில்
அரசுடமை எனும் அறிக்கை கிடந்தது.

இப்படியாக, உயிர் பிழைத்தவர்கள்
பின்புற மண்ணையும் தட்டியபடிக்கு
எழுந்தோம்.
வெறுங்கைகளோடு -
உடைந்த கப்பலை விட்டு அகன்ற
ரொபின்சன் குரூசோவைப் போல,
குலைந்த கூட்டை விட்டு அகன்ற
காட்டுப் பறவையைப் போல.

நாம் வாழவே எழுந்தோம்.
சாவை உதைத்து.
மண்ணிலெம் காலை ஆழப் பதித்து
மரண தேவதை இயற்கையாய் வந்து
வருக என்னும் இறுதிக் கணம்வரை,
மூக்கும் முழியுமாய்
வாழவெ எழுந்தோம்!

1983

Tuesday, August 21, 2007


ஈழத்து மண்ணும் எங்கள் முகங்க்களும்
1986ல் எழழுதப் பட்ட ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் 1987ல் சென்னையில் காந்தளகத்தால் வெளியிடப் பட்டது.இக் குறுங் காவியம் 1987 - 2003 வரை சென்னைப் பல்கலைக் களகத்தில் எம் பில் தமிழ் இலக்கிய பாட நூலாக அமைந்தது.எனது முதன்மைப் படைப்பான இந்த கவிதை நாவல் பற்றிய கருத்துக்களளை வரவேற்கிறேன்.http://noolaham.net/library/books/03/278/278.pdf
Posted by ஜெயபாலன் at 4:35 PM 0 comments

காட்டுப் பூவின் பாடல்
ஒரு கதை கேள் தோழி.ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிறரோமியோக்களின் கதை கேள்.காகிதப் பூக்களின் நகரத்தில்காதலில் கசிந்துதேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி.என் இனிய பட்டாம் பூச்சியேசுவர்க் காடுகளுள் தேடாதே.நான் வனத்தின் சிரிப்புவழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும்வானவில் குஞ்செனப் பாடியதுபிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ.ராணித் தேனீக்களே எட்டாதகோபுரப் பாறைகளில் இருந்துகம கமவென இறங்கியதுஅதன் நூலேணி.வாசனையில் தொற்றிவந்தவண்ணத்துப் பூச்சியிடம்இனிவரும் வசந்தங்களிலும்தேனுக்கு வா என்றது பூ.காதல் பூவே வசந்தங்கள்தோறும்ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிறபட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில்உலகம் தழைத்தது.நிலைப்ப தொன்றில்லா வாழ்வில்கடக்கையில் பெய்கிற முகிலே உறவுகள்.
Posted by ஜெயபாலன் at 4:24 PM 0 comments

உயிர்த்தேன்
உயிர்த்தேன்வ.ஐ.ச.ஜெயபாலன்காலப் பாலை நடுவினிலேவினோதங்கள் வற்றிஉயிர்ப் பம்பரம் ஓய்கையிலேவாழும் கனவாக என் முன்னேவளரும் சிறு நதியே.உன் தோழமையின் பெருக்கில்துயர்கள் கரையுதடிவாழத் துடிக்குதடி கண்ணம்மாஎன் வார்த்தைகள் காவியமாய்கூதிர் இருட் போர்வை உதறிகுவலயம் கண் விழிக்கபோதியோடு இலை உதிர்த்த இருப்பும்புன்னகைத்தே துளிர்க்கமனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன்மண்ணைப் புணருகின்றான்.மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மாமூச்சால் உயிர் மூட்டி.கடைசித் துளியும் நக்கிகாலி மதுக் கிண்ணம் உடைத்துஎன் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன்.நீ கள்நதியாக நின்றாய்.உயிர்த்தும் புத்துயிர்த்தும்இந்த உலகம் தொடர்வதெல்லாம்உன் பொற்கரம் பற்றியன்றோ .மாண்டவர் மீள்வதெல்லாம் பெண்ணே நின்மந்திரத் தொடுகையன்றோ .பெண்களே பூமியர்கள்ஆண்கள் நாம் பிற கோளால் வந்தவர்கள்உன்னைப் புரியாமல் கண்ணம்மாஇந்த உலகம் புரிவதில்லை
Posted by ஜெயபாலன் at 12:23 PM 0 comments

இன்றைய மது
இன்றைய மதுவ.ஐ.ச.ஜெயபாலன்உலகம்விதியின் கள்ளு மொந்தை.நிறைந்து வழிகிறது அதுமதுக் கிண்ணம் தாங்கியவர்களால்எப்போதும் நுரைத்தபடி.நேற்றிருந்தது வேறு.இங்கே நுரைபொங்குவதுபுதிய மது.அது இன்றைய நாயகனுக்கானது.நாளை கிண்ணம் நிறைகிறபோதுவேறு ஒருவன் காத்திருப்பான்.நிச்சயம் இல்லை நமக்குநாளைய மது அல்லது நாளை.எனக்காக இன்று சூரியனைஏற்றி வைத்தவனுக்கு நன்றி.அது என் கண் அசையும் திசைகளில்சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.மயக்கும் இரவுகளில்நிலாவுக்காகஓரம்போகிற சூரியனேஉன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.கள்ளு நிலா வெறிக்கின்றஇரவுகள்தோறும்ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமேகடவுளையும் பாம்பையும்.இதைத் தின்னாதே என்னவும்இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.காதலே எமது அறமாகவும்பசிகளே எமது வரங்களாகவும்குதூகலித்தோம்.எப்பவுமே வரப்பிரசாதங்கள்வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்உறவுகள் போலவும்நிகழ் தருணங்களின் சத்தியம்.நிலம் காய்ந்த பின்விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோபட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூடஅவனது வியர்வை முளைப்பதில்லை.போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.நனைந்த நிலத்தில்உழுகிறவனின் கவிதையை எழுதுகிறதுஏர்முனை.காலியான விதைப் பெட்டியில்காட்டுமலர்களோடு நிறைகிறதுகனவுகள்.
Posted by ஜெயபாலன் at 12:13 PM 0 comments

நட்போடு வாழ்தல்
நட்போடு வாழ்தல்வ.ஐ.ச.ஜெயபாலன்இன்னும் தொடுவானில் கையசைக்கும்மணக்கோலச் சூரியன்.கீழே படுக்கையில்பொறுமை இழந்த பூமிப் பெண்வெண்முல்லைப்பூ தூவியநீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள்.எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.என் இரு கண்களிவை என்ற துடுப்புகளைகரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும்.வழித்துணையை போற்றினும் புணரினும்எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.தோழிஉடன் இருக்கிற இன்பங்களும்பிரிகிற துன்பங்களும் அடுக்கியநினைவு நிகழ்வு நூலகம் அல்லவாநம் வாழ்வு.பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்துஆர்ப்பரித்த வானம்இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும்.என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமாநட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதாஅல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமாஇந்த மாரி இரவு.கண்சிந்தும் பிரிவுகளில்நிறைகிறது வாழ்வு.ஒவ்வொரு தோழ தோழியர் செல்கிறபோதும்காதலியர் வசைபாடி அகல்கையிலும்நாளை விடியாதென உடைந்தேன்.இனி முடிந்ததென்கிற போதெல்லாம்பிழைத்துக் கொள்கிறதுவெட்டுண்ட தாய் அடியில் புதிதாய் ஒருகுட்டிவாழை பூக்கிற உலகு.என் இன்றைய கனவுகளின் நாயகியோஎப்போதும் காதலில் நீந்துகின்ற மீன்.இன்னும் எத்தனை நாள் எத்தனை நாள்எனக்காக அந்த ஏந்திழையாள் யாழ் மீட்டும் ?தோழி உன் யாழிசையில்சந்தணமாய் எனது மொழி தேய்கிறது.கிடங்கில் திராட்சை மதுவாய்முதிர்கிறதென் கவி மனசு.எச்சில் ஒழுக வழி மறித்துமுத்தமிடும் துருவத்துப் பனிக் காற்றிலும்எரிகிறது என் ஆத்மா.கண்டங்களே அசைகிற உலகில்மனிதர்களிடையே நிலையானது எது ?எங்கள் நடுகல் வேலித் தாய் மண்ணில்கரு கறுத்த மேகங்களின் கீழ்பஞ்சு விதைகளாய் மிதக்கும் மாவீரர் கனவுகள்போலஉயிர்தெழுமெம் வாழ்வு.-2005. May
Posted by ஜெயபாலன் at 11:54 AM 0 comments
Saturday, August 18, 2007

என் கதை
அவள் தனி வனமான ஆலமரம்.நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.என்னை முதன் முதற் கண்டபோதுநீலவானின் கீழே அலையும்கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.நானோ அவளைகீழே நகரும் பாலையில் தேங்கியபாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டிஜாடை காட்டினாள்.மறுநாள் அங்கிருந்தது என் கூடு.இப்படித்தான் தோழதோழியரேஎல்லாம் ஆரம்பமானது.தண்ணீரை மட்டுமே மறந்துபோய்ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்பாலை வழி நடந்த காதலர் நாம்.அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.சிறகுகளில் மிதக்கும் எனக்கோநிலைத்தல் இறப்பு.மண்ணுடன் அவள் எனைவேரால் இறுகக் கட்ட முனைந்தும்,நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.உண்மைதான் அவளைநொண்டியென்று விரக்தியில் வைதது.முதலில் அவள்தான் என்னைப் பார்த்துகண்ட மரம் குந்தி, ஓடுகாலிமிதக்கும் நரகல் என்றாள்.ஒரு வழியாக இறுதியின் இறுதியில்கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்சமரசமானோம்.மாய ஊறவின் கானல் யதார்த்தமும்வாழ்வின் உபாயங்களும்காலம் கடந்தே வாய்த்தது நமக்கு.நம் காதலாய் அரங்கேறியதோஉயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்என்றோ எழுதிய நாடகச் சுவடி.இப்போது தெளிந்தேன்.சந்திக்கும் போதெலாம்என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்."ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்."மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்"என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்என் கிளைகளில் அமர்ந்ததோநீ மட்டும்தான்."இப்படித்தான் தோழதோழியரேஒரு மரமும் பறவையும் காவியமானது.
Posted by ஜெயபாலன் at 10:00 AM 2 comments
Subscribe to: Posts (Atom)